நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை

தனமல்வில பகுதிக்கு அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மொனராகலை – வெல்லவாய இதனமல்வில ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 9.20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவீட்டில் 2.0 மெக்னிடியூட் அளவில்  பதிவாகியுள்ளது.

இந்த பகுதிகளில் இவ்வாறான நிலநடுக்கம் ஒரு வருடத்திற்குப் பின்னர் பதிவாகியுள்ளது.

இந்த நிலையிலேயே நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *