
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று வரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளில், தாமதமான முடிவுகளில் மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்று உறுதியானதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.




