கொழும்பு நடமாடும் வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கொழும்பில் நடமாடும் வியாபாரிகளுக்கு ஒரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தினுள் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்கள் மாத்திரமே நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடமுடியுமென கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன அறிவித்தார்.

மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களையும் பெறாத நபர்கள் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதீப் யசரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *