நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களும் சரி கொரோனா மரணங்களும் சரி அதிகரித்து செல்லுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 3ஆயிரத்து 390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளது.





