நாட்டில் மேலும் 198 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 119 ஆண்களும், 79 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.





