26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்!samugammedia

லங்கா ஐ.ஓ.சிக்கு சொந்தமான 26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூ.ஆர். ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கியூ.ஆர். ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *