ஒழுக்காற்று விசாரணை குழுவுக்கு எவரும் தன்னை அழைக்கவில்லை-பொய்யான வதந்தி-ராஜித..!samugammedia

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று விசாரணை குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கால எல்லையின் அடிப்படையில், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒரே அரசியல் கோட்பாடுகளைக் கொண்ட இரண்டு குழுக்களை, நடைமுறையில் உள்ள சில முரண்பாடுகளைக் காட்டி, பிளவுபடுத்துவது, நாட்டுக்கும், இரு கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இழைக்கும் அநீதி என்பதே தனது கருத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *