மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை விதிக்கக்கூடாது – மத்திய அரசு

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை விதிக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிக்காட்டல் குறிப்பில், ரயில், வான்,தரை வழியாகவோ, நீர்வழியாகவோ அனைத்து போக்குவரத்துகளும் தடையின்றி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒரு மாநிலத்தில் நுழைவதற்கு RT-PCR  பரிசோதனைகள் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply