இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் அதனை ஒடுக்குவதற்கு தயார் என இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் அந்நாட்டினை முழுமையாக கைப்பற்ற இரண்டு மாதங்களாகும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக குறுகிய காலத்துக்குள் அவர்கள் நாட்டை கைப்பற்றியமை ஆச்சரியமளிப்பதாகவும் கூறினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்குள் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக் கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய முப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியாவில் பயங்கரவாதம் இல்லாத சூழல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *