6 மாத குழந்தை கொரோனாவிற்கு பலி

வவுனியாவில் 6 மாத குழந்தை ஒருவர் கொரோனாதொற்றிற்கு பலியாகியுள்ளார்.

குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

இதேவேளை வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்றையதினம் இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *