2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறையிடலாம்!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது குறித்து பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும்.

நாடு முழுவதும் பல பகுதிகளில் குறித்த 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்ட இடங்களில் அவற்றினை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் அது குறித்து பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என குறித்த செயலணி அறிவித்துள்ளது.

இதேவேளை 2,000 ரூபாய் கொடுப்பனவை உடனடியாக மற்ற பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *