கரீபியன் பிரீமியர் லீக்: முதல் போட்டியில் கயானா- ட்ரின்பகோ அணிகள் மோதல்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், ஒன்பதாவது அத்தியாயம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் இத்தொடரின் முதல் போட்டியில், கயானா அமசோன் வோரியஸ் அணியும் நான்கு முறை சம்பியனும் நடப்பு சம்பியனுமாகிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இப்போட்டியானது சென். கிட்ஸ் வோர்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கயானா அணிக்கு நிக்கலோஸ் பூரானும் ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணிக்கு கிய்ரன் பொலார்ட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.

இதுவரை இரு அணிகளும் 21முறை மோதியுள்ளன. இதில் 9 முறை கயானா அமசோன் வோரியஸ் அணியும் 12 முறை ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இப்போட்டியின் வெற்றி- தோல்வி எவ்வாறு அமைகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *