பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் – ரணில்

<!–

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் – ரணில் – Athavan News

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

அதன்படி உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று உதவி பெறுவதே இதற்கான தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிலைமை தொடர்பாகவும் முடக்க கட்டுப்பாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு நெடிக்குமாறும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 720 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *