
இராஜ் வீரரத்னவின் கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவலை யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC)பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பாடகர் இராஜ் வீரரத்ன அந்த பதவியை நேற்று (25) இராஜினாமா செய்திருந்தார்.
தனது இராஜினாமா தொடர்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பிய அவர், தனக்கு தனிப்பட்ட வேலைகள் உள்ளமை காரணமாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்தில் அறைந்தமையே அவரின் இராஜினாமாவுக்கு காரணம் என்று தகவல் பரவியது.
இது தொடர்பில் டெய்லி மீரருக்கு கருத்து வெளியிட்ட யோஷித்த ராஜபக்ஷ இராஜ் வீரரத்னவுக்கு தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார்.
அத்துடன், அவரை நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்வொன்றில் சந்தித்தாக கூறிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜ் வீரரத்ன, பதவி விலகியமைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




