யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





