இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையில் விமான சேவை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவையை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

கொழும்பு முதல் மாலைதீவுக்கு இடையே செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து நாளாந்தம் இந்த விமான சேவை பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டுபாய் மற்றும் மாலைதீவுக்கு இடையிலும், கொழும்பிலிருந்து டுபாய் ஊடாக மாலைதீவு வரையும் பயணிக்கும் குறித்த விமானம் பயணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான பயணங்களுக்காக போயிங் 777 வகையான விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *