அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இதன்படி புதிய விலை விவரங்கள்

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபாய்
சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபாய்
உருளை கிழங்கு (இலங்கை) ஒரு கிலோகிராம் 300 ரூபாய்
உருளை கிழங்கு (இந்தியா) ஒரு கிலோகிராம் 240 ரூபாய்
பெரிய வெங்காயம் (வெளிநாடு) ஒரு கிலோகிராம் 135ரூபாய்
சிவப்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *