ஆப்கானில் இருந்து மேலும் 35 பேர் மீட்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 24 பேர் இந்தியர்கள் எனவும், 11 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் நபர்களை மீட்க ஆபரேஷன் தேவிசக்தி என்ற திட்டதின் கீழ் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே 800 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

180 பேரை மீட்பதற்கு சி-17 என்ற விமானம் தயாராக இருந்த நிலையில், 35 பேரை மட்டுமே மீட்கமுடிந்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

அண்மை நாட்களில் காபூல் விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்களால் விமான நிலையத்தை வந்தடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *