நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.





