காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலில் நடத்த குண்டு வெடிப்பை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த தாக்குதல் பயங்கரவாத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துவதாகவும் குறித்த அறிக்கையில் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *