இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது.
இந்த நிலையில், தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 210 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளது.
மேலும், அண்மையில் 115 ரூபா முதல் 130 ரூபா வரையான விலைகளில் விற்பனையான சீனி கிலோ ஒன்றின் விலை, தற்போது 210 ரூபா முதல் 220 ரூபா வரையில் விற்பனையாவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், 105 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய சீனியே தற்போது 200 ரூபாவுக்கும் மேலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும், சீனி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே நாட்டில் அதன் விலைகள் அதிகரிக்கக் காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து சீனி நீக்கப்பட்டுள்ளது எனவும், இதனாலேயே அதன் விலை கட்டுப்பாடு இன்றி உயர்வடைந்து செல்கின்றது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.