இரண்டாவது நாளாகவும் 200க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 120 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *