கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் இதுவரை 49இலட்சத்து ஆயிரத்து 163பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஒன்பதாவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை ஒரு இலட்சத்து 24ஆயிரத்து 648பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 78பேர் பாதிக்கப்பட்டதோடு 81பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 44ஆயிரத்து 582பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 155பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 47இலட்சத்து 31ஆயிரத்து 933பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *