மன்னார் முதல் மாத்தளை வரை நடைபயணம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்! samugammedia

தேசிய கிறிஸ்தவ மன்றத் திருச்சபைகளும் சிவில் அமைப்பை சேர்ந்தவர்களும், சர்வமத மக்களும் ஒன்றிணைந்து மலையக மக்களுடைய இலங்கை வருகையின் 200வது ஆண்டை நினைவு  கூரும் முகமாக தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரையிலான நடைபயணமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த நடைபவனிக்கு யாழ்ப்பாண மக்களின் பங்குபற்றுதலும் ஆதரவு தெரிவித்தலும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் இன்று மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மதத் தலைவர்கள் , சமூக மட்ட பொது  அமைப்புக்களைச் சார்ந்தோர் பங்கெடுத்திருந்தனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *