இலங்கையில் டெல்டா திரிபால் 292 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு 100 சதவீதம் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவந்திர அறிவித்தார்
மேலும், இலங்கையில் “சுப்பர் டெல்டா” பிறழ்வு பரவியுள்ளது என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்
எனினும், இலங்கை மக்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் வேகம் அதிகரித்துள்ளது என்பதால், செப்டெம்பர் மாதமளவில் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.