கொரோனா தாக்கம் அசாதாரண சூழ் நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவோரை கிண்ணியா பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கிண்ணியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையாக குட்டிக்கராச்சி பாலத்தில் இந்த நடவடிக்கை இன்று சனிக்கிழமையும் (28) இடம் பெற்று வருகின்றது.
நாடு முடக்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அத்தியவசியமற்ற முறையில் வெளியில் நடமாடுவோரை பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு இந் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.