இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி!

கடவத்தை – எல்தெனிய பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் மாடியில் இன்று சனிக்கிழமை (28) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 57 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *