திருமலையில் 700 பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு..!samugammedia

திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 700 பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

வெருகல் -சிறி சண்பகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வானது வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இடம்பெற்றது.

வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே இவ் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

ஏனைய அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.அருள்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *