கதிர்காமம் பிரதேச செயலகத்தின் எல்லைக்கு உட்பட்ட வனப் பகுதிகள் வன பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் துணையோடு பல்வேறு தனிநபர்களால் அழிவுக்கு உட்பட்டு வந்தாலும், அதற்கு பொறுப்புள்ள சுற்றுச்சூழல் அதிகாரிகள் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீண்ட காலமாக கதிர்காமம் கிம்புள்கம, கொஹம்ப திகான, கலஹிடிய, வெஹரகம, கரவில, லுனுகம்வெஹர ,மின்சார யாலா வன எல்லை, சித்துல்பாவ வன எல்லை, தம்மென்னாவ பாதுகாப்பு ஆற்று பகுதி போன்ற மதிப்புமிக்க வன வளங்களை பெரிய அளவில் அழிக்கும் நபர்களால் நில அபகரிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
வனத்துறைக்கு சொந்தமான இந்த வன காடுகள் கதிர்காம பகுதியில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் மக்களாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.
முன்னைய காலங்களில் காடுகள் அழ பாரிய அளவில் அழிக்கப்பட்டாலும், வன அதிகாரிகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எத்தைகய நடவடிக்கைகளையும் செய்யவில்லை.
இத்தகைய ஆக்கிரமிப்பாளர்களில் பாதுகாப்புப் படையினர், அரசு அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் அடங்குவர்.
சிலர் காடுகளை அழிக்க பேக்ஹோக்களை பயன்படுத்துகின்றனர். தற்போது, வன பகுதிகளில் உள்ள யானைகள் மான் மற்றும் பன்றிகள் முதலான வன விலங்குகள் தங்குவதற்கு இடமில்லாமல் ஊர் பகுதிக்குள் வந்து வசித்து வருகின்றன.
இதுவரை, அவர்கள் 500 ஏக்கருக்கும் அதிகமான பாதுகாக்கப்பட்ட காடுகளையும், நீர்த்தேக்கங்கள் உட்பட பல பகுதிகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கதிர்காம பிராந்திய செயலாளர் ஏ. எம். நந்தசிறி இந்த நிலங்கள் பல்வேறு குழுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வும் தெரிவித்தார்.