முல்லைத்தீவு பேருந்து நிலையத்தினை இயங்க வைப்பதில் பல வருடங்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அதனை இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் நீண்ட நேர விவாதம் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன் தெரிவிக்கையில்,
தனியார் பேருந்து சங்கத்தினால் கூறப்பட்ட ஏற்பாடுகள் பிரதேச சபையினால் 100 வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வேறுவிதமான பிரச்சினையை கூறுகிறார்கள். முள்ளிவாய்க்காலால் பேருந்து வரும் என்றால் பேருந்து நிலையத்தில் பேருந்து செல்வதற்கு எந்த இடையூறும் இல்லை போன மாதம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன இன்று வேறு பிரச்சினையை கூறுவதாக இருந்தால் நாங்கள் நிதியை வீண்விரயம் செய்திருக்கிறோம் என தெரிவித்தார்.