இலங்கையில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் விடுவதற்கு தடை! samugammedia

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் காத்தாடிகளை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தைச் சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இவற்றை பொருட்படுத்தாமல் யாரேனும் செயல்பட்டால், அந்த நபர்களுக்கு எதிராக தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் அது கடுமையாகத் தண்டிக்கப்படும் குற்றமாகும் என்றும் நிறுவனம் வலியுறுத்துகிறது.

Leave a Reply