வவுனியாவில் 3 கிராம சேவகர் பிரிவுகள் அதிக ஆபத்தான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

வவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள், அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதியாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரம், நொச்சிமோட்டை, தோணிக்கல் ஆகிய பகுதிகளில்  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையினை சுகாதார தரப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சுகாதார தரப்பினருக்கு உதவியாக கிராம மட்டத்திலிருந்து தற்காலிக சுகாதார பணி உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *