பிரதமர் பதவியை சஜித் ஏற்கமாட்டார்…! கூறுகின்றார் ஹெக்டர் அப்புஹாமி எம்.பி…!samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய ஆட்சியின்கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்கமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

சஜித் தரப்பு எம்.பிகள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் எனவும்,  சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஆட்சியின்கீழ் இவ்வாறு எதுவும் நடக்காது. சஜித்தை கைவிட்டு செல்வதற்கு நாம் தயாரில்லை. அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நல்ல திட்டங்களை வரவேற்கின்றோம் எனவும் அதற்காக அரசுக்கு ஆதரவு என அர்த்தப்படாது அதேவேளை எதிரணி பலமாகவும் உள்ளது அத்துடன் எதிர்காலத்தில் மேலும் பலமடையும்.

எனவே, ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கான முயற்சியில்தான் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது எனவும் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *