அக்கரைப்பற்று,ஸ்ரீ இராமகிருஷ்ணா பாடசாலைக்கு பேருந்தினைப் பரிசளித்த சஜித் பிரேமதாசா

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்று (28) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜக்கிய மக்கள் சக்தியின் ”பிரபஞ்சம்” எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக   சுமார் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த பஸ் வண்டியானது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான சாதகமாக செயற்பாடுகளை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர் உதயகுமார் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின் பிராந்திய இணைப்பாளர் வெ.வினோகாந்த் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *