யாழில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயம்! samugammedia

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்று உள்ளதாகத் தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,,

யாழ் பொது நூலகத்திற்கு முன்னாலுள்ள யாழ் மாநகர சபையின் சிறுவர் பூங்காவில் பாரிய பல மரங்கள் காணப்படுகின்றன.

இந்த பூங்காவிற்குள் இருக்கின்ற மரங்களின் கீழ்  வீதியால் செல்கின்ற பொது மக்களும் வாகனங்களுடன் அந்த வாகனங்களின் சாரதிகள் பலரும் நில்லுக்காக தங்கி நிற்பதும் தரித்து நிற்பதும் வழமையாக காணப்படும்.

இந்த நிலையில் இன்றைய தினமும் குறித்த மரத்தின் நிழற் பகுதியில் நில்லுக்காக ஆட்டோவில் அதன் சாரதியும் தங்கி நின்றிருந்தார்.

அப்போது அடித்த பலமான காற்றினால் நீண்ட கால பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

அங்கு நின்றிருந்த ஆட்டோவின் மேல் மரம் முறிந்து வீழ்ந்த்தில் ஆட்டோ முழுவதும் சேதமடைந்த்துடன் அதன் சாரதி காயங்களுடன் தப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *