பெரஹராவில் பங்கேற்க வந்த யானை மீது துப்பாக்கிச் சூடு…! முக்கிய அதிகாரி கைது…!samugammedia

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெராவில் பங்கேற்க வந்த யானை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யானைக்கு வனவிலங்கு பாதுகாப்புத் துறை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

‘சீதா’ என்று அழைக்கப்படும் 48 வயதுடைய யானையை, காட்டு யானை என்று தவறாக நினைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *