ரயில்வே ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு முடிவு…!samugammedia

ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை சற்றுமுன் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததையடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

நேற்று காலை மாளிகாவத்தையில் புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதன்போது பிரதி கட்டுப்பாட்டாளர் தாக்கப்பட்டதையடுத்துஇ தாக்குதலை மேற்கொண்ட புகையிரத பாதுகாப்பு ஊழியரின் சேவையை இடைநிறுத்துமாறு கோரி கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது.

இதன் காரணமாக அலுவலக புகையிரத சேவைகள் உட்பட தபால் புகையிரத சேவை உள்ளடங்களாக 78 புகையிரத சேவைகள் நேற்று இரத்து செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *