மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு வாய்க்காலில் பட்டாரக வாகன மொன்று பாதயைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக்கியது.
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தோர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு -வாழைச்சேனை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனமே இவ்வனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .





