நில்வலா கங்கைக்கு அருகில் உள்ளோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!samugammedia

நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் அபாயமுள்ளத்தால் அதனை அண்மித்துள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு  பாரிய வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வெல்ல அபாய எச்சரிக்கை நாளை  (08) வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நில்வலா கங்கையை அண்மித்து 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதுடன், அவ்வாறு கடும் மழை பெய்தால், நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் நிலை ஏற்படுமெனவும் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *