உடுப்பிட்டி மகளிர் தேசிய பாடசாலையில் 2023 ம் ஆண்டிற்கான முதலாவது மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10:45 மணியளவில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமுமான திருமதி ராஜலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.
நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரதம விருந்தினர், மாணவர் பாராளுமன்ற அமர்வு மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு தேசியக் கொடி, பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கல சுடரினை இன்றைய அமர்வின் பிரதம விருந்தினரும், வடமராட்சி கல்வி வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் சண்முகம் உதயநாதன், பாடசாலை அதிபர் திருமதி இராஜலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள்,பிரதி செயலாளர் நாயகம் ப.கரம்சந்த் ஆசிரியர் மற்றும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் ஏற்றயதை தொடர்ந்து சபை அமர்வினை செயலாளர் நாடகமும், பாடசாலை அதிபருமான இராஜலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் ஆரம்பித்து வைத்து முதலாவதாக சபாநாயகர் தெரிவு இடம் பெற்றது.
சபாநாயகராக செல்வி க.தட்சிகா தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து பிரதி சபாநாயகர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பிரதம அமைச்சர், சபை முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற சபாநாயகர் உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் என்பன இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து சபையில் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பிரேரணைகள் முன் வைக்கப்பட்டன.
அவற்றை தொடர்பு மாணவர்கள், பாராளுமன்ற அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் முன்வைத்த பிரேரணைகள் தொடர்பில் மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைகள், உறுதிமொழிகள் முன்வைக்கப்பட்டதுடன் சபை அமர்வுகள் நிறைவு பெற்றன.
தொடர்ந்து சபை அமர்வு தொடர்பாக நிகழ்வின் பிரதம விருந்தினர் தனது கருத்துக்களை மாணவர்களுக்கு முன்வைத்தார்.
இதில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.