பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வீதியில் இறங்கிய புத்தளம் முஸ்லீம்கள்…!samugammedia

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக நகர சுற்றுவட்டாரத்தை சென்றடைந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200ற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில். ஈடுப்பட்ட மக்களினால் இஸ்ரேல் நாட்டின் கொடிக்கு செருப்பினால் அடித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *