சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை…! தாய் எடுத்த முடிவு…!samugammedia

ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் 12 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் நேற்று (12) அதமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டியாகல வத்தேகம கேகலன பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத பல சந்தர்ப்பங்களில் தந்தையினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், சிறுமி இதுபற்றி தனது தாயிடம் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து அட்டமலை பொலிஸில் தாய் புகார் செய்தார்.

இந்நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *