வீதியை கடக்க முயன்ற மாணவனை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி! samugammedia

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முயன்ற மாணவனை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று  மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள பாதாசாரிகள் கடவையின் ஊடாக குறித்த மாணவன் வீதியை கடக்க முயன்ற சமயத்தில் நெளுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மாணவனை மோதித்தள்ளியது.

விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *