கிளிநொச்சியில் கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு…! 17 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழப்பு…!samugammedia

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனையிறவு பகுதியில் நேற்றையதினம் மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக கடுகதி ரயிலில் மோதுண்டு 11 பசு மாடுகளும்  6 நாம்பன் மாடுகளுமாக மொத்தம் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு காரணமாகவே 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த கால்நடை உரிமையாளரின் கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *