யாழில், இன்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு! samugammedia

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.

இதன்போது போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் அரசியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நல்லூர் இளங்கலைனர் மண்டபத்தில் சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் உரையாடல் இடம்பெற்றது.

இந்த உரையரங்கு நிகழ்வில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமை உரையை வழங்கியுள்ளார். தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும், நலிவுறும் தமிழ்த் தேசியம் எனும் தலைப்பில் தழிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனும், பிராந்திய அரசியலில் இஸ்ரேல்-ஹமாஸ்போர் மாற்றங்களும் விளைவுகளும் எனும் தலைப்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கமும் கருத்துரைகளை வழங்கியுள்ளனர். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *