தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்..! – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்! samugammedia

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்றைய தினம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 18,750 லீட்டர் கோடாவும், 80 லீட்டர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.  

தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராமநாதபுரம் பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *