பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு…! விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்…!samugammedia

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 118 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி, பொது மக்கள் முறையிடலாம்.

அதேவேளை பொது பாதுகாப்பு அமைச்சின் மூலமாக இந்த துரித இலக்கம் பேணப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முறைப்பாடு அளிப்பவரினால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, ஆயுதப்படைகள், அனைத்து அரச நிறுவனங்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகளுக்களை முன்வைப்பதற்கான நிலையமொன்றாகவும் இந்த இலக்கம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *