நோர்வூட் பெஷன் நோர்வூட் காமன்ஸ்சில் கடந்த மூன்று மாதம் வேதனம் வழங்கவில்லை என அங்கு பணிபுரியும் 800 ஊழியர்கள் இன்று ஆடை தொழிற்சாலை முன்னால் பணி பகிஸ்கரிப்பு மேற் கொண்டு, அங்கு பணி புரியும் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று கொண்டு,
அந்த மகஜரை ஹட்டன் தொழில் ஆணையாளர் நாயகம் இடம் கையளிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்.
கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி எமது வேதனத்தில் அறவிட்ட போதும் அந்த பணம் வங்கிக்கு அனுப்பவில்லை.
அத்துடன் எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று மாதம் வழங்க பாடாமல் உள்ள வேதனத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த மகஜரில் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் கையொப்பம் பெற்று கொள்ள நடவடிக்கை எடுத்து உள்ளனர்.