வட்டு இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நவராத்திரி விழா…!samugammedia

விஜயதசமி தினமான இன்றையதினம் நாட்டின் பல பாகங்களிளும் உள்ள ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள், அலுவலகங்களில் விஜயதசமி நிகழ்வுகள் இடம்பெற்றது.

அந்தவகையில், யாழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் விஜயதசமி நிகழ்வுகள் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் லங்கா பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பூஜை வழிபாடுகள், ஏடு தொடக்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள், மாகாண – தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இந்தப் பாடசாலையில் கற்பித்து அதிபராக பதவி உயர்வு பெற்ற ஆறு அதிபர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *