தீப்பரவலில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…!samugammedia

கொழும்பு, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள 6 மாடிகளை கொண்ட ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை  6 மாடிகளை கொண்ட ஆடையகத்தில் குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில்  கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் காயங்கள் காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அவர்களில் 11 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *